Friday, May 16, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்படுவது சரியென்றால் புலிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதும் சரிதான்!

January 11, 2017
in News, Politics
0
ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்படுவது சரியென்றால் புலிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதும் சரிதான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்படுவது சரியென்றால் புலிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதும் சரிதான்!

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு விற்கப்படுவது பிழை இல்லை என்றால் புலிகளுடன் அன்று ரணிலின் அரசு செய்துகொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமும் பிழை இல்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்வதற்கு இந்த அரசு தீர்மானித்துள்ளது. இந்த வருடம் முடிவதற்குள் அதிகமான சொத்துக்கள் விற்கப்பட்டுவிடும்.

சீனா உள்ளிட்ட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கும் சொத்துக்கள் விற்கப்படவுள்ளன. நாட்டின் கடன் சுமையைக் குறைப்பதற்காகவே இவ்வாறு செய்வதாக அரசு கூறுகின்றது.

அவ்வாறு கடன் சுமை இருப்பதாகத் தெரியவில்லையே. கடன் சுமை உள்ள நாடு எதற்கு அமைச்சர்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்க வேண்டும்..?

அமைச்சர்களுக்கு வாகனங்களையும் மேலதிக கொடுப்பனவுகளையும் வழங்கிக்கொண்டு இந்த நாட்டு மக்கள் மீது கடன் சுமைகளை ஏற்றுவது எந்த வகையில் நியாயம்? இந்தத் தேவையற்ற சலுகைகளையும் திருட்டுக்களையும் நிறுத்தினால் போதும்.

நிறைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கவில்லை. கூட்டு முயற்சியின் ஊடாக அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என்று இந்த அரசு கூறுகின்றது.

அப்படி என்றால் ஏன் இதைத் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்? மக்களிடமோ மக்களின் பிரதிநிதிகளான எங்களிடமோ இதுபற்றி அறிவிக்காமல் எம்மைத் தெளிவுப்படுத்தாமல் செய்வது ஏன்?

இவ்வாறு அரச சொத்துக்கள் விற்கப்படுவது சரி என்றால் புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் அப்போது செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தமும் சரிதான்.

ஆகவே, இந்த அரசு செய்த,செய்யும் இதுபோன்ற தேசவிரோத செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்துகின்றது. இந்த மோசமான நிலைமை மேலும் தொடர அனுமதிக்க முடியாது. இதற்கு இன்றே முடிவு கட்ட வேண்டும்.

மேலும், நாம் இதற்கு எதிராக இந்த வருடம் முழுவதும் முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைளுடன் மக்கள் இணையவேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

ப்ளூட்டோவில் இராட்சத பனிக்கோபுரங்கள்: புகைப்படங்களை வெளியிட்டது நாசா

Next Post

வெள்ளை சாரி அணியத் தயாரா..? ரவிராஜ் இறப்பதற்கு முன்னர் மனைவிக்கு வந்த மிரட்டல்..! வெளியானது உண்மை

Next Post
வெள்ளை சாரி அணியத் தயாரா..? ரவிராஜ் இறப்பதற்கு முன்னர் மனைவிக்கு வந்த மிரட்டல்..! வெளியானது உண்மை

வெள்ளை சாரி அணியத் தயாரா..? ரவிராஜ் இறப்பதற்கு முன்னர் மனைவிக்கு வந்த மிரட்டல்..! வெளியானது உண்மை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025
சந்தானம் நடிக்கும் ‘ டி டி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு 

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’: சிக்கலில் சந்தானம்

May 16, 2025
சிரிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

May 15, 2025
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

May 15, 2025

Recent News

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு உப்பின் பெயர் விவகாரம் – அம்பலமான உண்மை: வெடித்த சர்ச்சை

May 16, 2025
சந்தானம் நடிக்கும் ‘ டி டி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு 

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’: சிக்கலில் சந்தானம்

May 16, 2025
சிரிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

May 15, 2025
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

May 15, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures