ஹஜ் உணர்த்தும் தியாகம் உலகிற்கான சிறந்த முன்மாதிரி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
சமத்துவம், சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு தியாகம் முக்கியமானதாகும். அந்த தியாகத்தை உலகிற்குப் போதிக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் உலகிற்கு நல்லதொரு படிப்பினை தரும் முன்மாதிரியாகும் எனவும் பிரதமர் தனது நீண்ட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.