Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹங்வெல்ல, அம்புல்கம சந்தியில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

September 16, 2019
in News, Politics, World
0

ஹங்வெல்ல பழைய வீதியிலுள்ள அம்புல்கம சந்தியில் நேற்று (15) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வேன் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்துக்கான காரணம் என்னவென்பது இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய சுரேஸ் சுவந்த என்பவர் உயிரிழந்துள்ளார். 26 வயதுடைய வஜிர குமார என்பவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

Previous Post

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் இன்று திறப்பு

Next Post

சஜித்தை இறக்குங்கள், நீங்கள் அப்படியே இருங்கள்!!

Next Post

சஜித்தை இறக்குங்கள், நீங்கள் அப்படியே இருங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures