Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஷரபோவாவுக்கு இரக்கம் காட்டிய சர்வதேச நீதிமன்றம்

October 5, 2016
in News, Sports
0
ஷரபோவாவுக்கு இரக்கம் காட்டிய சர்வதேச நீதிமன்றம்

ஷரபோவாவுக்கு இரக்கம் காட்டிய சர்வதேச நீதிமன்றம்

ஊக்க மருந்து எடுத்துக் கொண்ட விவகாரத்தில் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் தடை காலத்தை 15 மாதங்களாக குறைத்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்தது.

அவர் மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது சோதனையில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு 2 ஆண்டு தடையை சர்வதேச டென்னிஸ் சங்கம் விதித்தது. ஆனால் தனக்கு குறைந்த தண்டனை கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்தார்.

இந்நிலையில் தான் தெரியாமல் ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக கூறி அவர் 2 ஆண்டு தடையை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவில் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் ஷரபோவா மீதான தடை காலத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்து 15 மாதங்களாக குறைத்து விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Previous Post

ரசிகர்களை அழுக வைத்த இலங்கை வீரர்: வைரலாகும் வீடியோ

Next Post

இந்தியாவின் சிறந்த கீப்பர் தோனி இல்லை: கோஹ்லி அதிரடி!

Next Post
இந்தியாவின் சிறந்த கீப்பர் தோனி இல்லை: கோஹ்லி அதிரடி!

இந்தியாவின் சிறந்த கீப்பர் தோனி இல்லை: கோஹ்லி அதிரடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures