கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி கன்னட படம் மூலம் 17 வயதில் நடிகையானவர் பெங்களூரை சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே. விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த வாட்ச்மேன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வரும் கோமாளி படத்தில் காஜல் அகர்வால் தவிர்த்து சம்யுக்தா ஹெக்டேவும் நடிக்கிறார். இது தவிர்த்து அவர் தீயல் படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் அதிகம் பின்தொடரப்படும் கன்னட நடிகை என்றால் அது சம்யுக்தா தான். சம்யுக்தா ஹெக்டே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஐரோப்பாவுக்கு சென்ற இடத்தில் அவர் வெளிநாட்டவர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சாக்லேட்டும், வெனிலாவும் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சம்யுக்தா ஹெக்டே கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவார். ஆனால் அவர் இதுவரை தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எதுவும் தெரிவித்தது இல்லை. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சம்யுக்தா அந்த வெளிநாட்டவரை காதலிப்பதாக நினைக்கிறார்கள்.