ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

