கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக மேலும் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

