Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் பல திட்டங்கள்

November 19, 2017
in News, Politics
0
விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் பல திட்டங்கள்

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டினில் விதவைகள்,பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தேவையுடையோர் என தெரிவு செய்யப்பட்ட சுமார் 152 பெண்களுக்கு காப்புறுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் சல்மா ஹம்ஸா தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்;து கொண்டார்.

விதவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நோய் நிவாரண காப்புறுதித் திட்டத்தினை சரியா அடிப்படையில் அமானா வங்கியூடாக உள்ளுர் தனவந்தர்களின் உதவியுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக அமுல்படுத்தி வருவதாக சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

எமது அமைப்பில் 3000 க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கத்தவர்களாக உள்ளனர் தொழில் வசதி என்பவற்றினை ஓன்லைன் ஊடாக திட்டங்களை அமுல்படுத்தி வருதுவதுடன் உற்பத்தி பெருக்கு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தல் என்பதுடன் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் பாரிய அளவிலான வேலைத்திட்டங்களை எமது அமைப்பின் ஊடாக அமுல்படுத்தவுள்ளதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா…
விதவைகள் என்ற அடிப்படையில் இவர்களை தெரிவு செய்து சிரிய அளவிலாவது இவ்வாறான திட்டங்கனை அமானா தகாபுல் சரியா வங்கியூடாக திட்டங்களை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினர் அமுல்படுத்தி வருவதனை இட்டு நாம் மகிழ்ச்;சியடைகின்றோம்.
நாங்கள் வேறு சில திட்டங்கள் மூலம் பல குடும்பங்களுக்கு மாதாந்தம் 7500.00 அமானா வங்கியினூடாக செலுத்தி வருகின்றோம் என்று தெரிவித்தார்.

இவ்வாறான திட்டங்கள் ஊடாக விதவைகள் அதிக நன்மை பெற கூடிய வகையில் அமானா வங்கியுடன் நாங்கள் பேசி அறிக்கைகளை சமர்பித்து எதிர்காலத்தில் செய்ய முடியும் என்பதனையும் தெரிவிக்க விரும்புவதுடன் இன்றைய திட்டங்களை அமுல்படுத்த 100 பேருக்கு தான் உதவுவதாகவும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

Previous Post

நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகிவிட்டோம்-வடக்கு மாகாண முதலமைச்சர்

Next Post

யாழ்ப்பாணத்தில் புலி மீளெழவில்லை – மறுக்கிறார் வடக்கு DIG

Next Post

யாழ்ப்பாணத்தில் புலி மீளெழவில்லை - மறுக்கிறார் வடக்கு DIG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures