தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், பொருளாளர் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர், சென்னை கமிஷனரை சந்தித்து புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன், டிரஸ்டி மதுமிதா உள்ளிட்டோர் பொதுக்குழுவின் ஒப்புதல் இன்றி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி, சங்கத்தின் பணம் 37 லட்சம் ரூபாயை மோசடியாக அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளனர் என கூறினார்.