Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா நகரின் பல பகுதிகள் இன்று விடுவிப்பு

January 25, 2021
in News, Politics, World
0

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று (25) திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டது.

வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த கர்பிணி பெண் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த கிராமம் முடக்கப்பட்டது.

அத்தோடு வவுனியா நகரப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த நிலையில் பிரதான நகரம் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட நிலையில் கடந்த 18ம் திகதி வவுனியா நகர மத்தி தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றைய தினம் மில் வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், வவுனியா மொத்த வியாபார நிலையமும் மூடப்பட்டுள்ளது.
அத்தோடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் அன்டிஜன் அல்லது பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படாத பெருமளவு வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டுள்ளதுடன் பரிசோதனை மேற்கொண்டவர்கள் மட்டுமே வர்த்தக நிலையங்களை திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுவன்

Next Post

3 இடங்களில் திருமண நிகழ்வினை நடத்திய தம்பதி

Next Post

3 இடங்களில் திருமண நிகழ்வினை நடத்திய தம்பதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures