Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எச்சரிக்கை.!

September 8, 2017
in News
0

வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்கம் கார­ண­மாக எதிர்­வரும் 24 மணித்­தி­யா­லங்­களில் நாட்டின் பல பாகங்­களிலும் கடு­மை­யான மழைவீழ்ச்சி பதி­வாகும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்­வு ­கூ­றி­யுள்­ளது.

அத்­துடன் இலங்கையின் கடற்­பி­ராந்­தி­யங்­களில் 60 முதல் 80 கிலோ­மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்­கூடும். இதனால் கடற்றொ­ழிலில் ஈடு­படும் மீன­வர்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறு இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் கட­மை­நேர அதி­காரி அத்­துல கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள குறைந்­த­ள­வான தாழ­முக்கம் கார­ண­மாக நாட்டில் தொடர்ச்­சி­யாக கடுமையான மழைவீழ்ச்சி பதி­வாகி வரு­கின்­றது. அத்­துடன் இரவு வேளை­களில் அதி­க­ள­வாக மழைவீழ்ச்சி பதி­வாகக்கூடிய நிலை­யி­ருக்­கின்­றது. இந்­நி­லையில் எதிர்­வரும் 24 மணித்­தி­யா­லங்­களில் நாட்டின் பல பாகங்­களிலும் கடு­மை­யான மழைவீழ்ச்சி பதி­வாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அத­ன­டிப்­ப­டையில் வடக்கு, வட­மத்­திய, கிழக்கு மற்றும் ஊவா மாகா­ணங்­களில் அதிக மழை­வீழ்ச்சி பதி­வாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் மேல், மத்­திய, சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் 150 மில்­லி­ மீற்றருக்கும் அதி­க­ள­வான மழை­வீழ்ச்சி ஏற்படும். இது எதிர்­வரும் மணித்­தி­யா­லங்­களில் மேலும் அதி­க­ரிக்கும் நிலை­யி­ருக்­கின்­றது. அச்­சந்­தர்ப்­பங்­களில் இடி­யுடன் கூடிய கடு­மை­யாக மழைவீழ்ச்சி கிடைக்கும். அதன்­போது குறித்த பகு­தி­களில் பலத்த காற்று வீசக்கூடும்.

நேற்று (நேற்­று­முன்­தினம்) பெய்த கடும் மழை­கா­ர­ண­மாக கிரிந்­த­வெல பிர­தே­சத்தில் 194 மில்­லி ­மீற்றர் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. அத்­துடன் இரத்­தி­ன­புரி, காலி மற்றும் கேகாலை ஆகிய பகு­தி­க­ளுக்கு 150 மில்­லி­ மீற்றருக்கும் அதி­க­மான மழைவீழ்ச்­சியும் பதி­வா­கி­யுள்­ளது. இது எதிர்­வரும் மணித்­தி­ய­ாலங்­களில் அதி­க­மாகும் வாய்ப்­புக்கள் இருக்­கின்­றன. கொழும்பு முதல் புத்­தளம் வரை­யான கடற்­பி­ராந்­தி­யங்­களில் மணிக்கு சுமார் 60 தொடக்கம் 80 கிலோ­ மீற்றர் வரை­யான வேகத்தில் கடும் காற்­று­வீ­சக்­கூடும்.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் கட­லுக்கு செல் லும் மீன­வர்கள் உட்­பட பொதுமக்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­ட­வேண்டும். மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். அச்சந்தர்ப்பங்களில் மின் சாதனங் களை மக்கள் பயன்படுத்தும் போதும் மேகமூட் டத்துடனான வானிலை காணப்படும் போதும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

வவுனியாவில் பாடசாலை மாணவியை காணவில்லை.!

Next Post

சட்ட நடைமுறைப்படுத்தலில் உயரிய தன்மை வேண்டும் – ரணில்

Next Post
சட்ட நடைமுறைப்படுத்தலில் உயரிய தன்மை வேண்டும் – ரணில்

சட்ட நடைமுறைப்படுத்தலில் உயரிய தன்மை வேண்டும் - ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures