Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு கிழக்கு சிங்களமயமாக்கலுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை போராட்டம்

November 13, 2021
in News, Sri Lanka News
0
வடக்கு கிழக்கு சிங்களமயமாக்கலுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை போராட்டம்

சிங்களவர்களை மீள்குடியேற்றுவதன் மூலம் வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான தமிழர்களை நீர்த்துப்போகச் செய்ய ராஜபக்ச அரசு முயற்சிப்பதாக கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சிங்கள மக்களை வரவழைத்து மக்கள் தொகையை திட்டமிட்டு மாற்றியமைப்பதாக ஸ்ரீலங்காவிற்கான இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் பெர்க்லருடன் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு சிங்களமயமாக்கல் தொடர்பில் தமிழ் அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் தொடர்ச்சியாக எச்சரித்துள்ள போதிலும் கத்தோலிக்க மதகுருமார்கள் சர்வதேச பிரதிநிதி ஒருவருடன் பேசும் அரிய சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை, மக்களின் வாழ்க்கை மற்றும் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னாரைச் சேர்ந்த பிடெலிஸ் பெர்னாண்டோ, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ஞானப்பிரகாசம், திருகோணமலை நோயல் இம்மானுவேல், மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா ஆகியோர் பலவந்தமாக காணிகளை ஆக்கிரமித்து சிங்களவர்களைக் குடியேற்றுவதால் தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 ராஜபக்ச அரசாங்கம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திப் பணிகளை கைவிட்டுள்ளதாகவும், இரு பகுதிகளிலும் இந்திய அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கும் இடையூறு விளைவிப்பதாகவும் அவர்கள் சுவிட்ஸர்லாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் நேற்று நாடாளுமன்றத்தில், “யாழ்ப்பாணத்தில் 14,000 பேரும் கிளிநொச்சியில் 4,000 பேரும் காணியற்றவர்களாக இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

“அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் இன்னும் தமிழர்களுக்கு மீளக் வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் சிங்கள மக்களைக் கொண்டு வந்து காணிகளை பகிர்ந்தளித்து இனத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Next Post

இரு பெரும் பொருளாதார நாட்டு தலைவர்களுக்கு இடையில் திங்கள் சந்திப்பு

Next Post
இரு பெரும் பொருளாதார நாட்டு தலைவர்களுக்கு இடையில் திங்கள் சந்திப்பு

இரு பெரும் பொருளாதார நாட்டு தலைவர்களுக்கு இடையில் திங்கள் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures