பிரித்தானியாவில் கத்தியுடன் பேருந்தில் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற மர்ம நபரை ஆப்பிரிக்கர் ஒருவர் அடித்து ஓட விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
Stoke Newington பகுதியில் 149 எண் பேருந்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது மர்ம நபர் ஒருவன் கத்தியுடன் ஓட்டுநர் ஜன்னல் வழியாக பேருந்தில் நுழைந்துள்ளான்.
உடனே ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளார். பின்னர், பேருந்தில் எச்சரிக்கை ஒலியை எழுப்பியுள்ளார். இந்நிலையில், பேருந்திலிருந்து ஆப்பிரிக்கர் ஒருவர் தாக்குதல்தாரியுடன் சண்டையிட்டு அவனிடமிருந்த கத்தியை கைப்பற்றியுள்ளார்.
இதனையடுத்த அந்த மர்ம நபர் பேருந்திலிருந்து தப்பி ஓடியுள்ளான். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், காயமடைந்த ஆப்பரிக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
மேலும், குறித்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தொடர்புக் கொள்ளும் படி பொலிசார் அறிவித்துள்ளனர்.