Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரோஹிங்கியா விவகாரம்; பதற்றம் ஏற்படாத பேச்சில் கவனம் செலுத்துகிறேன்: சூ கி

November 17, 2017
in News, Politics, World
0

ரோஹிங்கியா விவகாரத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டு விடாமல் பேசுவதற்கான வழிகளில் கவனம் செலுத்தி வருகிறேன் என மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூ கி இன்று கூறியுள்ளார்.

மியான்மர் நாட்டில் இருந்து ரோஹிங்கியா மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அவர்கள் பல நாடுகளில் அகதிகளாக உள்ளனர். நெருக்கடி நிறைந்த சூழலில் முகாம்களில் அவர்கள் வசிப்பதனால் சிறு குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று அகதிகள் பலருக்கு போதிய உணவு, சுகாதார வசதி கிடைக்கவில்லை என்றும் அகதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதற்காக அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி டில்லர்சன் இன்று மியான்மர் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு ராணுவ தளபதி மின் ஆங் மற்றும் சூ கியை சந்தித்து பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்பொழுது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் உள்ளன என கூறியுள்ளார்.

ரோஹிங்கியா விவகாரத்தில் மியான்மர் நாட்டு தலைவரான சூ கி அமைதியுடன் இருக்கிறார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் மியான்மர் தலைநகர் நேபையிடாவில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சனுடன் இணைந்து செய்தியாளர்களுக்கு சூ கி அளித்துள்ள பேட்டியில், நான் அமைதியாக இருக்கவில்லை. மக்கள், நான் கூறுவது போதிய ஆர்வம் அளிக்கவில்லை என கருதுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நான் கூறுவது பரபரப்பிற்காக அல்ல. அது சரியானது என்ற வகையில் இருக்க வேண்டும். மக்களை ஒருவருக்கொருவர் எதிராக மாற்றுவதற்கு அல்ல என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் பதற்றம் ஏற்பட்டு விடாமல் பேசுவதற்கான வழிகளை பற்றி கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

பூமி அளவுள்ள உயிரினங்கள் வாழும் சூழல் கொண்ட புதிய கிரகம் மிக அருகில் கண்டுபிடிப்பு

Next Post

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதியம்

Next Post
வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதியம்

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures