கங்கனா, கிரிஷ் இயக்கத்தில் கங்கனா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த மாதம் 25ம் தேதி வெளிவந்த படம் ‘மணிகர்ணிகா – த குயின் ஆப் ஜான்சி’. இப்படம் இந்தியா வசூலில் தற்போது 100 கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
படம் வெளியான பின் படத்தை முதலில் இயக்கிய தெலுங்கு இயக்குனர் கிரிஷுக்கும், கங்கனாவுக்கும் இடையே படத்தை யார் இயக்கியது என்பது குறித்து கடும் சர்ச்சையும், சண்டையும் நடந்தது. அதற்கு கங்கனாவுக்கு பாலிவுட்டிலிருந்து யாரும் ஆதரவு அளிக்கவில்லை. மேலும், சுதந்திரப் போராட்ட வீராங்கனையைப் பற்றி எடுத்த படத்தை பாலிவுட்டில் உள்ள கங்கனாவின் சக கலைஞர்கள் யாரும் பாராட்டவில்லை. அது குறித்தும் கங்கனா கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்.
அவற்றையும் மீறி 25 நாட்களில் படம் இந்தியாவில் 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது. ‘தனு வெட்ஸ் மனு, கிரிஷ் 3’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கங்கனாவின் மூன்றாவது 100 கோடி வசூல் படம் ‘மணிகர்ணிகா’.
இந்தப் படத்தை வாங்கியவர்கள் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க லாபம் வந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் டிஜிட்டல் உரிமை 40 கோடி, சாட்டிலைட் உரிமை 20 கோடி விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
சுமார் 80 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் விளம்பரத்திற்காக மட்டும் 20 கோடி ஒதுக்கியுள்ளார்கள். மொத்தமாக தியேட்டர் வசூல் மூலம் 150 கோடி வரை கிடைத்துள்ளதாம்.
இந்தப் படத்திற்குப் பிறகு கங்கனா அவருடைய சொந்த வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்க உள்ளார்.