இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 7 பேரையும் இன்று மாலை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

