நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘சர்க்கார்’ படம் முழு நீள அரசியல் படமாக உருவானதில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்தை, ரஜினி ஸ்டைல் படமாக உருவாக்க, நடிகர் விஜய் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அட்லீ இயக்கத்தில் உருவாக இருக்கும் அந்தப் படத்தை, ரஜினி ஸ்டைலில் முழு கமர்சியல் படமாக உருவாக்க வேண்டும் என, நடிகர் விஜய், இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்தி பரவி இருக்கிறது.
அரசு இலவச விளம்பரங்களை விமர்சித்து எடுக்கப்பட்ட ‘சர்க்கார்’ பட காட்சிகளைத் தொடர்ந்து, சர்க்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு அரசுத் தரப்பில், கோர்ட் மூலம் நெருக்கடி கொடுப்பதைத் தொடர்ந்தே, நடிகர் விஜய், இப்படியொரு முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.