Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

May 19, 2021
in News, Sri Lanka News
0
யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

வெற்றிகொள்ளப்பட்டிருக்கும்  விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்காக 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, நாட்டில் ஏனைய சிறுபான்மை மக்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று யுத்தவெற்றி தினம் தொடர்பில் அவர் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்துக்கு எதிராக வெற்றிகொள்ளப்பட்டிருக்கும் இந்த நாட்டின் விடுதலையை நிலையான விடுதலையாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக இந்த வெற்றியை அடைந்துகொள்ள தனது உயிரை தியாகம் செய்து போராடிய படைவீரர்கள், அதனால் விதவையானவர்கள், அங்கவீனமுற்றவர்கள் மற்றும் அனைத்து படைவீரர்களுக்கும் உயர்ந்த அந்தஸ்த்தை கெளரவத்தை வழங்கவேண்டும்.

அதற்காக குறைநிரப்பு பிரேரணை ஒன்றை கொண்டுவந்து, ராணுவ வீரர்களுக்கு நாங்கள் வாக்களித்த அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க நாங்கள் எமது ஆதரவை பூரணமாக வழங்குவதற்கு தயார்.

மேலும் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தது, இந்த நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகும். நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியினருக்கு பாதுகாப்பு அற்ற தன்மை நிலவுவதாக இருந்தால், தொடர்ந்தும் அநீதி ஏற்படுவதாக அவர்கள் நினைப்பதாக இருந்தால், அந்த பிச்சினைகளுக்கு மத்தியில் எமது நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதில்லை.

அதனால் அந்த தொகுதியினருடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்து, விசேடமாக ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, அந்த மக்கள் தொகுதியினருக்கும் மதத்தவர்களுக்கும் செவிசாய்த்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பாதுகாப்பற்ற நிலைதொடர்பில் அவர்களது வேண்டுகோல்களுக்கும் செவிசாய்த்து, வெற்றிகொள்ளப்பட்டிருக்கும் இந்த வெற்றியை, விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க கோரிக்கை

Next Post

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் கொரோனாவில் இருந்து நலம் பெறுகிறார்!

Next Post

தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் கொரோனாவில் இருந்து நலம் பெறுகிறார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures