Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யுத்தத்தின் காரணமாக வடக்கு மக்கள் இழந்து போன அபிவிருத்தி மீண்டும் பெற்று கொடுக்கப்படும்

July 10, 2016
in News, Politics
0
யுத்தத்தின் காரணமாக வடக்கு மக்கள் இழந்து போன அபிவிருத்தி மீண்டும் பெற்று கொடுக்கப்படும்

யுத்தத்தின் காரணமாக வடக்கு மக்கள் இழந்து போன அபிவிருத்தி மீண்டும் பெற்று கொடுக்கப்படும்

வடக்கு மக்கள் இழந்துபோன அபிவிருத்தி உரிமைகளை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம்செலுத்தி வருகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் Wencai Zhang உள்ளிட்டபிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை)ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற பொழுதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளநிதியுதவிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குதொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தாம் தயார் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின்பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி,நாட்டை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கும் உதவிகளை ஊழல் மோசடிகளின்றி சரியாகமுதலிடுவதற்கு எமது அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரம்பிக்கப்பட்டுள் செயற்திட்டங்களை உரியகாலத்தில் நியமங்களுக்கு ஏற்பநிறைவு செய்வதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாயத்துறை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையின் சகல பிரதேசங்களுக்கும் சமனானமுறையில் அபிவிருத்தியைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம்.

அதேவேளை, 26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக வடக்குமக்கள் இழந்துபோன அபிவிருத்தி உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுமார் 50 வருட காலமாக இலங்கையுடன் சிறந்த தொடர்புகளை பேணிவரும் ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை இலங்கையின் அபிவிருத்திக்காக 7.9 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

கலப்பு நீதிமன்றம் இன்னும் ஒன்பது மாதங்களில்

Next Post

அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மங்கள சமரவீர!

Next Post
அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மங்கள சமரவீர!

அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மங்கள சமரவீர!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures