யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்ற அதேவேளையில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்த கொள்வார்கள் எனக் கூறப்படுகின்றது.
இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் அந்த அரசில் அமைச்சராக இருந்த விஐயகலா மகேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது.
முன்னர் அமைச்சராக இருந்த காலங்களில் கூட்டத்தை தலைமை தாங்கிய நடாத்திய ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் ஆட்சி மாற்றத்தின் பின்னராக நடைபெற்ற இக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தற்பொது புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக அங்கஐன் இராமநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலையே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.