யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியுமே இந்த கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், இந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்காமையினால், அதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில், இந்த பேரணி நடத்தப்படவுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு பேரணியானது, யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த பேரணி முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.