Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

November 15, 2017
in News, Politics
0
யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு (14) 7 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 பல்வேறு இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் புரிந்துள்ளது.

மானிப்பாய் – சங்குவேலியில் நேற்றிரவு 7 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த வாளவெட்டுக் கும்பல் அங்கிருந்த 4 பேரை வெட்டிக் காயப்படுத்தியது. வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நாசப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பித்ததுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா ஜெனீஸ்கரன் ( வயது – 35) இராசதுரை ரவிசங்கர் ( வயது -40) ரவிசங்கர் பகீரதன் ( வயது -15) மற்றும் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் ( வயது- 54) ஆகிய நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் ஸ்தலத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை

ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டியதுடன் அங்கி்ருந்த பொருள்களை உடைத்து நாசமாக்கியது.

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்த்துடன் கோட் அணிந்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

கும்பலின் வாள்வெட்டு இலக்காகி ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைச் சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் ( வயது 35 ) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில் டிப்போ

கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாகவுள்ள உணவகத்துக்குள் இன்றிரவு 8.10 மணியளவில் புகுந்த கும்பல் அங்கிருந்த தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியது.

சம்பவத்தில் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் ( வயது 27) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முடமாவடி

நல்லூர் முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பித்ததுள்ளது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

புதியதொரு முஸ்லிம் கட்சியை நிறுவ சமூக செயற்பாட்டாளர்கள் தீர்மானம்

Next Post

அம்பாறை மாவட்டம் கரையோர பகுதிகளில் கடல் வருவதாக பதற்றம்: மக்கள் வீதிகளில் அலைமோதல்

Next Post

அம்பாறை மாவட்டம் கரையோர பகுதிகளில் கடல் வருவதாக பதற்றம்: மக்கள் வீதிகளில் அலைமோதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures