Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரி இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

September 3, 2019
in News, Politics, World
0

வரும் 2020ஆம் ஆண்டிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடக்கிலுள்ள தமிழ்த் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியும், எதிரணியினரும் இரகசிய பேச்சுக்களை தேர்தலை இலக்காகக் கொண்டு ஆரம்பித்திருந்தாலும் , அவர்களுக்கு எந்தவொரு திட்டமும் கிடையாது எனவும் ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.

மத்திய வங்கி ஊழல் மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கான ஆவணங்கள் தயாராகிவிட்டதாகவும், இந்த மோசடிக்குப் பின்னால் இருந்த மற்றும் பொறுப்பு கூறவேண்டியவர்களை விரைவில் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் காலம் நெருங்கிவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது சம்மேளனம் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்றுவருகின்றது.

இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சி தாவுவோர் நாடு குறித்து சிந்திப்பதில்லை என்றும் அவர்கள் தங்களுக்கான அமைச்சுக்கள், சொகுசு வசதிகள் என்பவற்றையே நினைக்கிறார்கள் எனவும் இதற்கே மக்கள் தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ற்குப் பின்னர் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தில் தனக்குத் தெரியாமலேயே பலவற்றை செய்ததாகவும், புதிய லிபரல்வாதம் இலங்கைக்கு பாதகம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார் .

அதோடு நாட்டில் ஊழல்மிகு அரசியல்வாதிகள் உள்ளதாகவும், அவர்களுக்கு மதம், கலாசாரம், கட்சி இல்லை என்றும் அவர்களே இன்று ஓரிடத்தில் ஒன்றுகூடியுள்ளதாகவும், கடந்த 04 வருட தமது ஆட்சிகாலத்தில் அவர்களுக்கு எதிராகவே தாம் போராடியதே அன்றி ஆட்சிசெய்யவில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபை முதல் மாகாண சபைகள் அனைத்திலும் பிரதேச சபை வரையிலும் ஊழல்மோசடிகளே நிரம்பியுள்ளதாகவும், இதன் பொறுப்புக்களை அரசாங்கமும் எதிர்கட்சியுமே ஏற்க வேண்டும் என்றும் இருதரப்புக்கும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கி மோசடியாளர்களை அரசாங்கத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும் எனவும், இதுகுறித்த இன்னும் பல விடயங்கள் எதிர்வரும் நாட்களில் அம்பலமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கான ஆவணங்களை தயார்படுத்தல் வழங்கலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தவறிவிட்டதால் அவரே தேர்தல் நடத்தாமைக்கான பிரதான பொறுப்பாளி என்றும் ஜனாதிபதி சாடியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகும் ஜனாதிபதிக்கு 19ஆவது திருத்தத்தின் ஊடாக எந்த அதிகாரமும் கிடையாது என்றும், அனைத்தும் பிரதமருக்கே சாரும் எனவும், எனினும் இதுகுறித்து ஊடகங்கள், மக்கள், அரசியல் தலைவர்கள் பேசுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லோரும் ஜனாதிபதி தேர்தல் குறித்தே பேசுவதாகவும், ஆனால் 2020இல் ஜனாதிபதி அல்ல, நாட்டை பிரதமரே பொறுப்பேற்பார் என்றும் எனவேதான் பிரதமரை நியமிப்பதிலேயே சுதந்திரக் கட்சி கவனம் செலுத்துகின்றதாகவும் மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

தனது அரசாங்கத்திலேயே அரச பயங்கரவாதமான துப்பாக்கிப் பிரயோகம் என்பன அரச தரப்பிலிருந்து இடம்பெறவில்லை என்றும் , இராணுவத்தினர் மீதும் எந்தக் குற்றச்சாட்டும் த னது ஆட்சியில் முன்வைக்கவில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் தனது ஆட்சிகாலத்தில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக தடுப்பு முயற்சிகளை எடுத்தபடியினால்தான் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று பலர் ஆடைகளுடன் நடமாடுவதாகவும், இல்லையெனில் அவர்களிற்கு கோவணங்களும் அவர்களுக்கு மிஞ்சியிருக்காது எனவும் 68 வது மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நியாயமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன்

Next Post

சுதந்திரக் கட்சியின் 68ஆவது மாநாடு

Next Post

சுதந்திரக் கட்சியின் 68ஆவது மாநாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures