Friday, May 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மைத்திரியின் அழைப்புக்காக மீண்டும் காத்திருக்கின்றார் சம்பந்தன்

October 16, 2017
in News, Politics
0
மைத்திரியின் அழைப்புக்காக மீண்டும் காத்திருக்கின்றார் சம்பந்தன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததையடுத்து சிறைச்சாலை வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் இரவு சேர்க்கப்பட்டுள்ளபோதிலும் அங்கிருந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களைப் பலாத்காரமாக மீண்டும் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்த்துள்ளோம் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக சிறைச்சாலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுள் மதியழகன் சுலக்ஷன் தானாக முன்வந்து மீண்டும் சிறை திரும்பி போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். ஏனைய இருவரும் சில நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுத் திரும்பி போராட்டத்தில் இணைந்திருந்தனர்.

சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மூன்று அரசியல் கைதிகளதும் போராட்டம் இன்று 22ஆவது நாளைத் தாண்டியுள்ளது.

கைதிகளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் முன்னெடுக்கும் 11ஆவது தடவையான உண்ணாவிரதப் போராட்டம் இதுவாகும்.

ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின்போது தமது கோரிக்கை தொடர்பில் ஒரு நியாயமான முடிவு கிடைக்குமென்ற நம்பிக்கை அவர்களிடமிருந்ததாக குடும்பத்தவர்கள் தெரிவித்தனர். எனினும், இந்த விடயம் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தனது வழமையான பாணியில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என கைதிகளின் குடும்பத்தவர்கள் கவலை வெளியிட்டனர்.

நேற்றுமுன்தினம் மதியத்தின் பின்னர் கைதிகளின் உடல்நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியதையடுத்தே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனக் குடும்பத்தவர்கள் மேலும் கூறினர்.

இந்நிலையில், “அரசியல் கைதிகள் அனைவரும் விரைந்து விடுவிக்கப்படவேண்டும். இனிமேலும் அவர்களின் விடயத்தை இழுத்தடிக்கமுடியாது. இப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். இந்த விடயம் குறித்து திட்டவட்டமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசுவேன். ஜனாதிபதியின் அழைப்புக்காகக் காத்திருக்கின்றேன்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார்.

“கைதிகள் விடயம் ஒரு தொடர்கதையாக நீடிக்கின்றமை நல்லிணக்கம் ஏற்படுவதற்கான புறச்சூழலைப் பெரிதும் பாதித்து நிற்கின்றது. இந்த விடயத்தில் தீர்க்கமான அரசியல் தீர்மானங்கள் அவசியப்படுகின்றன. அதை அரசியல் தலைமைகள் எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது எனக் கருதுகிறேன்” என்று இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் கடந்த வார ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், அதற்கான நேரம் ஜனாதிபதியால் ஒதுக்கப்படாததையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கடும் சீற்றத்துடன் அவசர கடிதம் எழுதியிருந்தார். அதற்கு ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பவில்லை.

அதனையடுத்து யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஜனாதிபதியின் நிகழ்வை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் எம்.பிக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆரவ் ஓவியாவிற்கு கொடுத்த பரிசை தான் சுஜா பிறந்தநாளிற்கு நடிகை ஓவியா கொடுத்தாராம்

Next Post

அமெரிக்கா, தென் கொரியா போர் பயிற்சி: சிக்கலில்

Next Post
அமெரிக்கா, தென் கொரியா போர் பயிற்சி: சிக்கலில்

அமெரிக்கா, தென் கொரியா போர் பயிற்சி: சிக்கலில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025

Recent News

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

May 9, 2025
நிலையியற் கட்டளையை மீறிய அர்ச்சுனா: நாடாளுமன்றில் வலுக்கும் குற்றச்சாட்டு

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி

May 9, 2025
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ரெட்ரோ பட இலாபத்தில், 10 கோடியை அறக்கட்டளைக்குக் கொடுத்த சூர்யா

May 8, 2025
தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

தயாரிப்பாளராகவும் மாறும் விஜய் மகன்…!

May 8, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures