இலங்கை நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை,வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் வருகிற 6-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.இந்த தொடருக்கான இலங்கை அணி வியாழனன்று அறிவிக்கப்பட்டுள்ளது.காயம் காரணமாக கேப்டன் மேத்யூஸ் விலகியுள்ளதால் டெஸ்ட் கேப்டனான இருக்கும் தினேஷ் சந்திமால் டி-20 தொடருக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வீரர்கள் விவரம்:
தினேஷ் சந்திமால் (கேப்டன்),உபுல் தரங்கா,குசால் பெரேரா,குசால் மெண்டிஸ்,குணதிலகா,தசுன் ஷனகா,திசாரா பெரேரா,ஜீவன் மெண்டிஸ்,லக்மல், உதானா,தனஞ்ஜெயா,அபோன்சா,நுவான் பிரதீப்,சமீரா,தனஞ்ஜெயா டி சில்வா.
முதல் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் வரும் 6-ஆம் திகதி(செவ்வாய்) மோதுகின்றன.