Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முடிந்தால் கைதுசெய்யுங்கள்! – சவால் விடுகிறார் ஞானசாரர்

June 6, 2017
in News
0

தம்மை கைதுசெய்வதற்கு முன்னர் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரை கைதுசெய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், பொலிஸாருக்கு அஞ்சி தான் செயற்பட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

இனவாத கருத்துக்களை பரப்பி வரும் ஞானசார தேரரை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கியுள்ள நிலையில், சமூக வலைத்தளமொன்றில் ஞானசாரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தெற்கைச் சேர்ந்த தன்னை, முடிந்தால் மலைநாட்டைச் சேர்ந்த பொலிஸ்மா அதிபர் கைதுசெய்து காட்டட்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். அத்தோடு, தம்மை கைதுசெய்தால் அதற்கான ஆயத்தங்களுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் செயற்படும் ஞானசாரரை நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளதோடு, இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ்மா அதிபரும் கூறியிருந்தார். இந்நிலையில் ஞானசார தேரர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

மஹிந்த – மைத்திரியை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெறவில்லை!

Next Post

தினகரன் அதிமுகவுக்கு தேவையில்லை: முகத்தில் அறைந்த ஜெயக்குமார்

Next Post

தினகரன் அதிமுகவுக்கு தேவையில்லை: முகத்தில் அறைந்த ஜெயக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures