Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்காது – அனுரகுமார எம்.பி

September 22, 2016
in News, Politics
0

மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்காது – அனுரகுமார எம்.பி

விடுதலைப் புலிகள் இலங்கையில் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், யுத்த அழிவை சந்தித்துள்ள வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர்கள் மாத்திரமே விடுதலைப் புலிகளின் மீள்வருகை குறித்து பேசுகின்றனர்.

எனினும், அதற்கான சாத்தியகூறுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றது. வடக்கில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை ஏற்படுத்துவதற்கான எண்ணம் ராஜபக்ச குழுவினருக்கு இருந்தாலும், தமிழ் மக்களுக்கு இல்லை.

இதேவேளை, வடக்கையும் தெற்கையும் பிரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியும், தமிழர் தரப்பிலுள்ள இனவாதிகளுமே முயற்சி செய்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: Featured
Previous Post

பூமியை நோக்கி விழுகிறதா சீனாவின் செயலிழந்த விண்வெளி நிலையம்?

Next Post

தமிழர் சிறுபான்மை இனம் அல்ல ஐ.நாவில் ஒலித்த குரல்

Next Post
தமிழர் சிறுபான்மை இனம் அல்ல ஐ.நாவில் ஒலித்த குரல்

தமிழர் சிறுபான்மை இனம் அல்ல ஐ.நாவில் ஒலித்த குரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures