Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மிளகாய் பொடியை தூவி ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

January 2, 2018
in News
0
மிளகாய் பொடியை தூவி ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் 02.01.2018 அன்று காலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து லொறியில் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

02.01.2018 அன்று காலை 08.00 மணியளவில் பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த இருவர் நுவரெலியா பூங்கா வீதியில் வைத்து லொறியை வழி மறித்துள்ளனர்.

பின்னர் லொறியின் கண்ணாடியை உடைத்து, மிளகாய் பொடியை சாரதி மற்றும் பணத்தை கொண்டு சென்ற நிறுவன ஊழியர் மீதும் தூவி விட்டு பணப் பைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் வண்டியில் பாதுகாப்பு பெட்டகம் இருந்த போதும் அதில் பணம் வைத்திருக்கப்படவில்லை.

எனினும், இந்த விடயம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post

மாணவிக்கு கரம் கொடுத்த ஜனாதிபதி மைத்திரி

Next Post

உதவிக்கு வந்த நபரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்

Next Post
உதவிக்கு வந்த நபரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்

உதவிக்கு வந்த நபரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures