Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படும் | அமைச்சர் காஞ்சன

May 4, 2023
in News
0
மின் கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படும் | அமைச்சர் காஞ்சன

அரசாங்கத்தின் கொள்கைக்கமையவும் , ஏற்கனவே அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவும் வருடத்தில் இரு சந்தர்ப்பங்களில் மின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அதற்கமைய எதிர்வரும் ஜூலைக்குள் மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்று மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரின் டுவிட்டர் பதிவில் , ‘எதிர்வரும் ஜூலை மாதத்தில் மின்சார உற்பத்தி செலவுகள் மீளாய்வு செய்யப்பட்டு மின் கட்டணங்கள் திருத்தப்படும்.

கடந்த 2022இல் எடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கமையவும் , அமைச்சரவை அங்கீகாரத்துக்கமையவும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலையில் மின் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை மின்சாரசபை மறுசீரமைப்புக்களுக்கமைய புதிய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விலை சூத்திரம் 20 ஆண்டுகளுக்கொருமுறை மாறக் கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வலு சக்தி துறையில் சீர் திருத்தங்கள் , நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுசா குபோடா மற்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கிடையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.

அரசின் கொள்கை, முன்மொழியப்பட்ட விலை சூத்திரம், மறுசீரமைப்பு கொள்கைகள் , கடன்கள் , மானியங்கள், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Previous Post

எனது கணவருக்கு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு – முகமட் சமியின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி புட்டினை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு | ரஸ்யா

Next Post
ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி புட்டினை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு | ரஸ்யா

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி புட்டினை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு | ரஸ்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures