Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாஸ்கோவில் கட்டுமானப் பொருள்கள் சந்தையில் பயங்கர தீ விபத்து: 3000 பேர் வெளியேற்றம்

October 9, 2017
in News, World
0
மாஸ்கோவில் கட்டுமானப் பொருள்கள் சந்தையில் பயங்கர தீ விபத்து: 3000 பேர் வெளியேற்றம்

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள சந்தை ஒன்றில் ஏற்பட்ட நெருப்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். மாஸ்கோவில் உள்ள, கட்டுமானப் பொருள்களுக்கான சந்தையில் நேற்று திடீரென பயங்கர தீப்பற்றியது.

மரச்சாமான்கள் அதிகளவில் இருந்ததால், தீ வேகமாக பரவியதோடு, அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அச்சந்தையினுள் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 3000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கொழுந்து விட்டு எரிந்த தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகிய போதும், உயிரிழப்புகள் ஏதும் நேரிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

மார்செய் தாக்குதலாளியின் சகோதரன் – இத்தாலியில் கைது!!

Next Post

அமெரிக்க அதிபர் டிரம்ப் மனித குலத்தையே அழித்துவிடுவார்: சே குவாராவின் மகள் விளாசல்

Next Post
அமெரிக்க அதிபர் டிரம்ப் மனித குலத்தையே அழித்துவிடுவார்: சே குவாராவின் மகள் விளாசல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மனித குலத்தையே அழித்துவிடுவார்: சே குவாராவின் மகள் விளாசல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures