Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மனோ­விடம் பிறந்­தநாள், பரிசு கோரிய ரணில்

December 19, 2017
in News, Politics
0

கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­தலில் தனித்துப் போட்­டி­யி­டு­வ­தற்கு அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி தீர்­மா­னித்­தி­ருந்த போதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார்.

அமைச்சர் மனோ கணே­சனின் பிறந்த தினம் நேற்­று­முன்­தி­ன­மாகும். அன்று காலை மனோ கணே­ச­னுடன் தொலை­பே­சியில் உரை­யா­டிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிறந்த நாள் வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­த­துடன் தனக்கு பிறந்த நாள் பரிசு வழங்­கு­மாறு அமைச்­ச­ரிடம் கோரி­யுள்ளார். உள்­ளூ­ராட்சி தேர்­தலில் கொழும்பு மாவட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்­கான சம்­ம­தத்தை பிறந்த நாள் பரி­சாக தனக்குத் தரு­மாறு பிர­தமர் கோரி­யுள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்தக் கோரிக்­கையை அடுத்து நேற்­றுமுன் தினம் இரவு அமைச்சர் மனோ கணேசன் பிர­த­மரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். நேற்று இரவும் மீண்டும் இவ்­வி­டயம் குறித்து கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றுள்­ளது.

கொழும்பு மாந­கர சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்­டணி அமைத்து போட்­டி­யி­டு­வது குறித்து தமிழ் முற்­போக்குக் கூட்­டணி பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தது. இதன்­போது தொகுதிப் பங்­கீடு விட­யத்தில் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் கோரிக்­கைக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­நி­திகள் உரிய இணக்­கப்­பாட்டைத் தெரி­வித்­தி­ருக்­க­வில்லை. இதனால் இந்தப் பேச்சில் இழு­பறி நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­தலில் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் சின்­ன­மான ஏணிச் சின்­னத்தில் தனித்து கள­மி­றங்­கு­வ­தற்கு முடிவு செய்­தி­ருந்­தது. தனித்துப் போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆயத்­தங்­களை முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ­க­ணேசன் மேற்­கொண்­டி­ருந்தார்.

இந்த நிலை­யில்தான் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் மனோ கணே­ச­னுடன் தொடர்­பு­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யிட வரு­மாறு மீண்டும் அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார். தனக்குப் பிறந்த நாள் பரிசு வழங்­கு­மாறும் அவர் கோரி­யி­ருக்­கின்றார்.

இத­னை­ய­டுத்து ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் பேச்­சுக்கள் தொடர்ந்து வருகின்றன. தொகுதிப் பங்கீட்டில் இணக்கம் காணப்பட்டால் தமிழ் முற்போக்குக் கூட்டணி கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும். இல்லையேல் தனித்து ஏணிச் சின்னத்தில் களமிறங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Previous Post

லலித் வீரதுங்க சிக்குவாரா..?

Next Post

ஜனாதிபதியின் பக்கம், பல்டி அடிப்பவர்கள் அதிகரிப்பு

Next Post

ஜனாதிபதியின் பக்கம், பல்டி அடிப்பவர்கள் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures