Saturday, August 2, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மனைவியுடன் சென்ற எஸ்.பி-யை நள்ளிரவில் மிரட்டிய மர்மக் கும்பல்!

October 12, 2017
in News, World
0
மனைவியுடன் சென்ற எஸ்.பி-யை நள்ளிரவில் மிரட்டிய மர்மக் கும்பல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பெரம்பூர் மேம்பாலத்துக்கும் ஐ.சி.எஃப் பகுதிக்கும் இடையில் உள்ளது, ராஜீவ் காந்தி நகர். போலீஸ் எஸ்.பி ஒருவர், தன்னுடைய மனைவியுடன் அந்த வழியாக காரில் வந்துகொண்டிருக்கிறார். திடீரென அந்தக் காரை வழிமறித்துள்ளது ரௌடி கும்பல். எஸ்.பி சுதாரிப்பதற்குள், அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் காரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தத் திடீர் தாக்குதலால் எஸ்.பியும் அவரது மனைவியும் நிலைகுலைந்தனர் . “யார் நீங்க? எதுக்காக இப்படிப் பண்றீங்க..?” என இருவரும் அலற, அரிவாள் முனையில் இருவரையும் சிறைவைத்தனர் ரௌடிகள்.

இருவரிடமும் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றைப் பறித்துள்ளது அந்தக் கும்பல். எதுவும் செய்ய முடியாமல் அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்த எஸ்.பி-யிடம், ‘எவனுக்கு வேணும்னாலும் போன் போடு. ஊருக்குள்ள எவனாவது பெரியவன் இருந்தா வரச் சொல்லு போ…’ எனத் தலையில் அடித்துள்ளனர். அந்த இடத்திலிருந்து எஸ்.பி, அவரது மனைவி, கார் டிரைவர் ஆகியோர் நீண்ட தூரம் ஓடியுள்ளனர். ஓர் இடத்தில் ஆசுவாசப்படுத்திக்கொண்ட எஸ்.பி, அந்த வழியாகச் சென்றவரின் உதவியோடு ஐ.சி.எஃப் காவல்நிலையத்துக்குப் போன்செய்கிறார்.

எதிர்முனையில் போன் எடுத்தவரிடம், ‘யார்னே தெரியலை… பத்துக்கும் மேற்பட்டோரைக்கொண்ட கும்பல் வந்து…’ என அதிர்ச்சியோடு விளக்க, ‘எஸ்.பி மேலயே கை வெச்சுட்டானுங்களா?’ எனக் கருவியபடியே, இரண்டு போலீஸ் பேட்ரல் வாகனம் மற்றும் போலீஸார் புடைசூழ, சம்பவ இடத்துக்கு வந்தார் எஸ்.ஐ ஒருவர். இதைக் கண்டு அசராத அந்தக் கும்பல், எஸ்.ஐ-க்கும் உடன் வந்தவர்களுக்கும் ஆளுக்கு தலா ஓர் அறை கொடுத்துள்ளது. பின்னர், நடுரோட்டில் சிரித்தபடியே, ‘எங்களைத் தேடி வர்ற அளவுக்கு தைரியம் வந்திருச்சா..?’ எனக் கலாய்த்துள்ளனர். வேறு வழியில்லாமல், வாகனங்களை விட்டுவிட்டு ‘உயிர் பிழைத்தால் போதும்’ என எஸ்.பி-யை மீட்க வந்த போலீஸார் தப்பி ஓடிவிட்டனர். இது நடந்தபோது மணி நள்ளிரவு 1.30. இதன்பிறகு வேறுவழியில்லாமல், கமாண்டோ படைக்குத் தகவல் கொடுத்துள்ளனர் உயர் அதிகாரிகள்.

அதிகாலை 5 மணிக்கு வந்த கமாண்டோ படை, போலீஸ் பேட்ரல் வாகனத்தை மீட்டுள்ளது. இதில், எஸ்.பி-யின் கார் மட்டும் மிஸ்ஸிங். சாவகாசமாக தாக்குதலை முடித்துவிட்டு, எஸ்.பி காரை ஓட்டிச் சென்றுவிட்டது அந்த மர்மக் கும்பல். அந்தக் காரையும் சற்று முன்னர்தான் கண்டுபிடித்துள்ளனர்.

‘இப்படியொரு கொடூரத் தாக்குதலை நடத்தியது யார்?’ எனக் கண்டறிய எஸ்.பி-யிடம் சில புகைப்படங்களைக் காட்டியுள்ளனர் ஐ.சி.எஃப் காவல்நிலைய போலீஸார். மணவாளன், அப்பு என்ற இரண்டு ரௌடிகளை அடையாளம் காட்டியிருக்கிறார் எஸ்.பி. தாக்குதலுக்குக் காரணமான மற்றவர்களை வலைவீசித் தேடி வருகிறது சென்னை மாநகர காவல்துறை.

Previous Post

சீன ஹேக்கர்கள் கைவரிசை? அதிர்ச்சியில் ஆஸி. அரசு

Next Post

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

Next Post
பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

August 2, 2025
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

August 2, 2025
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு | மனித உரிமைகளுக்கான மையம் நேரில் ஆய்வு

திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம்

August 2, 2025
யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் 

யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் 

August 2, 2025

Recent News

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

அக்யூஸ்ட் – திரைப்பட விமர்சனம்

August 2, 2025
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி ‘ தணிக்கை சான்றிதழ் சிக்கல்

August 2, 2025
சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு | மனித உரிமைகளுக்கான மையம் நேரில் ஆய்வு

திருகோணமலை சம்பூர் கடற்கரையில் மனித எச்சங்கள் : மூதூர் நீதிமன்ற நீதிபதி கள விஜயம்

August 2, 2025
யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் 

யாழில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் 

August 2, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures