Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் எஜமானியை வெட்டிக்கொன்ற பெண் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

January 4, 2022
in News, Sri Lanka News
0
கைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடக பேச்சாளர் இன்று நீதிமன்றத்தில்

மட்டக்களப்பில் எஜமானியை கண்டம் துண்டமாக வெட்டிக்கொலை செய்து கொள்ளையடித்த வேலைக்காரி அவரது தந்தை  ஆகிய இருவருக்கும் 18 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பார் வீதியில் பெண் ஓருவரை கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட வேலைக்காரப் பெண்ணையும் அவரது தந்தையையும் எதிர்வரும் 18 திகதிவரை  விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் இன்று திங்கட்கிழமை (04)  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மட்டக்களப்பு பார்வீதியிலுள்ள 48 வயதுடைய செல்வராசா தயாவதி என்ற பெண்ணை, அவரது வீட்டில் வேலை செய்த வேலைக்காரப் பெண் ஒருவர் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு, அவரிடிமிருந்த 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்ற குறித்த வேலைக்காரப் பெண்ணையும், அவரது தந்தையையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து, குறித்த இருவரையும் கைது செய்த பொலிசார் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை இன்று ஜனவரி 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டர்.

குறித்த வழக்கு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில்  விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது கொரோனா காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் அழைத்து வரமுடியாதையிட்டு காணொளி மூலம் தொடர்ந்து மேலும், 14 நாட்களுக்கு 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், எதிர்வரும், 11 ஆம் திகதி மரண விசாரணையை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஒமிக்ரோனையடுத்து புதிய கொவிட் மாறுபாடு பிரான்ஸில் கண்டறியப்பட்டது

Next Post

தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post
மாணவியை துஸ்பிரயோகம் செய்த இளைஞனும் பெற்றோரும் கைது

தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures