Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்கள் வழங்கியுள்ள ஆணையை சரியாக பயன்படுத்த வேண்டும் ; அரசுக்கு பசில் ஆலோசனை

August 16, 2020
in News, Politics, World
0

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள மகத்தான ஆணையை சரியாக பயன்படுத்த வேண்டுமென பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று அலரி மாளிகையில் இலங்கையின் திட்டமிடல் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலின்போது பசில் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “மக்களால் வழங்கப்பட்டுள்ள மகத்தான ஆணையை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

மேலும் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை செயற்படுத்துவதற்கே மக்கள் பெரும்பான்மை ஆதரவினை வழங்கியுள்ளனர்.

எனவே அதற்கமைய, நாட்டின் அபிவிருத்தியில் தெளிவான மாற்றத்தை கொண்டுவர வேண்டும். விசேடமாக தொழிலாளர்களை மையப்படுத்தி கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

மேலும், அபிவிருத்தி உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் மட்டுப்படுத்தப்படக்கூடாது. எனினும் மக்களின் பங்களிப்புடன் விரிவான அபிவிருத்தி செயற்பாட்டை நோக்கி நகர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ; சந்திரிக்கா திட்டவட்டம்

Next Post

‘அபே ஜனபல’ கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் ; விசேட கலந்துரையாடல்

Next Post

‘அபே ஜனபல’ கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் ; விசேட கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures