Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகளிர் ஒருநாள் உலக கிண்ணத்துக்கான பயணத்தை நாளை ஆரம்பிக்கும் இலங்கை அணி

November 15, 2021
in News, Sports
0
மகளிர் ஒருநாள் உலக கிண்ணத்துக்கான பயணத்தை நாளை ஆரம்பிக்கும் இலங்கை அணி

நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் நாளை (16 ஆம் திகதி) காலை சிம்பாப்வே புறப்படவுள்ளனர்.

ஒன்பது நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுவரும் தகுதிச் சுற்றுப்போட்டிக்கான பல பயிற்சிகளில் கடந்த ஐந்து மாதங்களாக இலங்கை வீராங்கனைகள் வெற்றிகரமாக பங்குபற்றியுள்ளனர்.

தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி ‘ஏ’ பிரிவில் விளையாடும். அந்த பிரிவில் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை இலங்கை எதிர்கொள்ளும்.

இந்தக் குழுவில் பப்புவா நியூ கினியா அணியும் இடம்பெற்றிருந்த போதிலும், பி.சி.ஆர். சோதனையில் அணியின் வீரர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 பாதிப்பால், கடந்த 2 ஆண்டுகளாக இலங்கை மகளிர் அணி சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. எவ்வாறாயினும், உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில், இந்தப் பயிற்சிப் போட்டிகளை விளையாட இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் சிம்பாப்வேயில் நவம்பர் 21 ஆம் திகதி தொடங்க உள்ளது.

உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் 2020 இல் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும் கொவிட்-19 வைரஸின் தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐசிசி) போட்டியை ஜூலைக்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது, பின்னர் இந்த ஆண்டு நவம்பரில் சிம்பாப்வேயில் தகுதிச் சுற்றுகளை நடத்த முடிவு செய்தது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

Next Post

சோமாலியாவில் உகண்டா இராணுவ வீரர்கள் இருவருக்கு மரண தண்டனை

Next Post
சோமாலியாவில் உகண்டா இராணுவ வீரர்கள் இருவருக்கு மரண தண்டனை

சோமாலியாவில் உகண்டா இராணுவ வீரர்கள் இருவருக்கு மரண தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures