Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதையில் நாக பாம்பை பிடித்து விளையாடியவருக்கு நேர்ந்த கதி

December 1, 2020
in News, Politics, World
0

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் யாழ்.வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி வெளியன்தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மகேஸன் தவம் என்ற 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் வீட்டுக்கு சென்றிருந்த குறித்த நபர் நாக பாம்பு ஒன்றை பிடித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அதன் பின்னர் பாம்பை விட்டுவிட்டு துாங்க சென்றவர் திடீரென நெஞ்சு வலியால் துடித்ததுடன் தண்ணீர் கேட்டுள்ளார்.
இதனையடுத்து சுமார் 3 செம்பு தண்ணீரை குடித்தபோதும் நெஞ்சுவலி ஓயாத நிலையில் பருத்துறை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அவருடைய கையில் பாம்பு தீண்டியதற்கான அடையாளம் காணப்படுவதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

Previous Post

சடலமாக மீட்கப்பட்ட 9 வயது சிறுமி ; மரணத்தில் சந்தேகம்!

Next Post

சாதாரண தர பரீட்சை குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும்

Next Post

சாதாரண தர பரீட்சை குறித்து இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures