ஜப்பானின் என் இ சி நிறுனம் தயாரித்துள்ள பறக்கும் கார்கள் வரும் 2030ம் ஆண்டில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
இதற்குத் தீர்வு காணும் பொருட்டு ஜப்பானின் பிரபல நிறுவனமான என்.இ.சி ஆட்டோமொபைல் நிறுவனம் பறக்கும் காரைத் தயாரித்து அதனை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது.
4 புரப்பல்லர்களுடன் கட்டியமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் 4 பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நின்ற நிலையிலும் ஓடுதளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும்.
முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்த பின்னர் வரும் 2030ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என என் இ ஈஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.