Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து பிரிட்டன் இலங்கையைத் தப்பவிடாது

February 11, 2021
in News, Politics, World
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரின்போது, இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நடவடிக்கைகளைப் பிரிட்டன் இம்முறை புதிய பிரேரணை ஊடாக முன்னெடுக்கும். பொறுப்புக்கூறல் கடமையில் இருந்து இலங்கை ஒருபோதும் நழுவ முடியாது.என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரின் அழைப்புக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கொழும்பில் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் விதமாகத் தயாரிக்கப்படும் புதிய வரைபு தொடர்பில், தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படுகின்றது எனவும் சுமந்திரன் எம்.பியிடம் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெனிவா விவகாரங்கள், இலங்கை அரசின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன என்று சுமந்திரன் குறிப்பிட்டார்.

Previous Post

நூற்றில் 57 பேருக்கு அடுத்த மாதளவில் கொவிஷீல்ட்

Next Post

தொடரும் தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

Next Post

தொடரும் தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures