Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேஸ்புக் காதலால் நேர்ந்த கொடூரம்! இரு உயிர்கள் பலி: 14 பக்க கடிதம் மீட்பு

November 28, 2017
in News
0

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்கும் உலகத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய துயரமிகு சம்பவங்கள் இரண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரக்காபொல பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பேஸ்புக் மூலம் அறிமுகமான தனது காதலியை பார்ப்பதற்காக பூகொடையிலிருந்கு கண்டிக்கு மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த 30 வயதுடைய இளைஞன் வரக்காபொல மாஹேன பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பூபொட மண்டாவல பிரதேசத்தில் வசித்து வரும் உதய கமல் மாலதெனிய என்ற இளைஞனாவார்.

குறித்த இளைஞன் கடந்த சில மாதங்களுக்கு முன் நாவலப்பிட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுடன் பேஸ்புக் மூலம் காதல் தொடர்பை வளர்த்துக் கொண்டுள்ளார்.

தனது பேஸ்புக் காதலியை சந்திப்பதற்காக கண்டி தலதா மாளிகைக்கு அருகில் வருமாறு கூறி காதலிக்கு நிறைய பரிசுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு செல்லும் போதே வரக்காபொல பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

பேஸ்புக் காதலால் மற்றுமொரு சோக சம்பவமும் வரக்காபொலயில் அரங்கேறியுள்ளது.

பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலன் தன்னை ஏமாற்றி விட்டதால் விரக்தியடைந்த நிலையில் வரகாபொல தொலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட குறித்த பெண் பேஸ்புக் மூலமாக இரண்டு வருடத்திற்கும் மேலாக நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இரண்டு வருடத்தில் பேஸ்புக் காதலனை ஒரு தடைவ கூட நேரில் சந்தித்ததில்லை இதனால் விரக்தியடைந்த குறித்த பெண் 14 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த இரு சம்பவங்கள் குறித்தும் வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Previous Post

அரைகிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் விளக்கமறியலில்

Next Post

கைது செய்யப்படக்கூடாதென மஹிந்தவுடன் இணைந்து கோத்தபாய செய்த காரியம்!

Next Post

கைது செய்யப்படக்கூடாதென மஹிந்தவுடன் இணைந்து கோத்தபாய செய்த காரியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures