Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேண்தகு நோக்கு தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

November 2, 2017
in News, Politics
0
பேண்தகு நோக்கு தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2030 ஆம் ஆண்டாகும் போது இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த நிபுணர் குழுவின் முதலாவது அறிக்கை வரைபு நேற்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பேராசிரியர் மொஹான் முனசிங்க அவர்களினால் இவ் வரைபு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

2030 ஆம் ஆண்டாகும்போது பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளில் இலங்கை அடைய வேண்டிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் குறித்த பேண்தகு அபிவிருத்தி நோக்கை வரைவதற்காக ஜனாதிபதி அவர்களினால் கடந்த ஜனவரி மாதம் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக பேராசிரியர் மொஹான் முனசிங்க நியமிக்கப்பட்டார்.

பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளுடன் தொடர்பான விவசாயம், போக்குவரத்து, மின்சக்தி, சுகாதாரம், கல்வி, நீர், சமுத்திரம் மீன்பிடி, நகர, பௌதிக திட்டமிடல் ஆகிய இலக்குகளினூடாக 2030 ஆம் ஆண்டாகும்போது இலங்கை அடைய வேண்டிய இலக்குகள் குறித்து இவ்வரைபு விரிவான விடயங்களை உள்ளடக்கியுள்ளதுடன், அவ்விடயங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேற்படி பேண்தகு அபிவிருத்தி நோக்கு இலங்கையில் வரையப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இவ்வரைபு தொடர்பாக மக்கள் கருத்தறிவதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் தேசிய பேண்தகு கலந்துரையாடல் என்ற பெயரில் வெளியிடப்படவுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை இலங்கை அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இது குறித்த மக்கள் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படுவதுடன், இலங்கையின் எதிர்கால பேண்தகு அபிவிருத்தி நோக்கு குறித்து பொதுமக்கள், அரசியல்வாதிகள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் விரிவானதொரு கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளுக்கேற்ப குறித்த அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, தேசிய பொருளாதார பேரவையின் செயலாளர் லலித் சமரகோன், ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சிரால் லக்திலக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous Post

நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது!!

Next Post

உள்­நாட்­டில் தீர்வு காணா­விட்­டால் பன்­னாட்டு அழுத்­தம் அதி­க­ரிக்­கும்

Next Post

உள்­நாட்­டில் தீர்வு காணா­விட்­டால் பன்­னாட்டு அழுத்­தம் அதி­க­ரிக்­கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures