Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டார் பிரதமர்..!

July 29, 2019
in News, Politics, World
0

இந்தியாவில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டி விட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி, நாட்டில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்குள் புலிகள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது என்று 9 ஆண்டுகளுக்கு முன்னர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆனால் 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இலக்கை எட்டி விட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த கணக்கெடுப்பு அறிக்கையானது ஒவ்வொரு இந்தியனையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும் வகையில் உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார்.

Previous Post

குளத்தில் மூழ்கி 7 சிறுவர்கள் உயிரிழப்பு

Next Post

ஹரித்வார் சிவாலயத்தில் குவிந்த கோடிக்கணக்கான சிவபக்தர்கள்

Next Post

ஹரித்வார் சிவாலயத்தில் குவிந்த கோடிக்கணக்கான சிவபக்தர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures