Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய பிரேரணையில் இலங்கை குறித்து கவனம் செலுத்தப்படும் – பிரித்தானியா

February 23, 2021
in News, Politics, World
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை, இலங்கை குறித்து கவனம் செலுத்

க்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை, இலங்கை குறித்து கவனம் செலுத்தும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையின், 46 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமான நிலையில், ஆரம்ப அமர்வில் உரை நிகழ்த்திய பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டொமினிக் ராப் இதனைத் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்காக, இலங்கை குறித்து பிரித்தானியா ஒரு புதிய பிரேரணையை முன்வைக்கும்.

மனித உரிமைகளை மீறுபவர்களைக் கணக்கிடும் ஒரு திறனுள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பைக் காண விரும்புகிறோம்.

மனித உரிமைகள் பேரவை, அதன் பங்கை முழுமையாக ஆற்றத் தயாராக இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், அதன் நற்பெயர் மிகவும் பாதிக்கப்படக்கூடும் என தாம் அஞ்சுவதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் தனது உரையில் கூறியுள்ளார்.

கனடா, ஜேர்மனி, வடக்கு மஸிடோனியா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான இணைத் தலைமை நாடுகள் குழு, இலங்கை குறித்த புதிய பிரேரணையை முன்வைக்கவுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கவுள்ள பிரேரணை தொடர்பாக, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கொழும்பில் நேற்று சந்தித்துள்ளனர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

.

Previous Post

பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கை விஜயம்!

Next Post

இம்ரானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து

Next Post

இம்ரானுடனான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures