Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய இறைவரி சட்டத்தின் மூலம் 45 பில்லியன் ரூபா வருமானம்

September 8, 2017
in News, Politics
0
புதிய இறைவரி சட்டத்தின் மூலம் 45 பில்லியன் ரூபா வருமானம்

புதிய தேசிய இறை­வரி சட்­ட­மூலத்தை நிறை­வேற்­று­வதன் ஊடாக 45 பில்­லியன் ரூபா வரு­மானம் அர­சாங்­கத்­திற்கு கிடைக்கும். மேலும் மக்கள் மீது சுமத்தும் வற் வரி­யையும் 2 வீதத்­தினால் குறைக்க முடியும்.

இதன்­படி குறித்த சட்­ட­மூ­லத்தின் அடிப்­படை விட­ய­தா­னங்கள் அடுத்த மாதம் முதல் அமு­லுக்கு வரும். எனினும் அடுத்த வரு­டத்தின் ஏப்ரல் மாதத்­தி­லேயே பூர­ண­மாக அமுல்ப்­ப­டுத்­தப்­படும் என்று நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர சபையில் தெரி­வித்தார்.

அத்­துடன் வரு­மான வரி செலுத்­தா­த­வர்­க­ளுக்கு எதி­ராக அறவிடப்படும் தண்­ட­ப­ணங்­க­ளிலும் மாற்­றங்கள் செய்­ய­வுள்­ள­துடன் அவர்­க­ளுக்­கான வழக்கு விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை உள்நாட்­ட­ர­சிறை சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

வரு­மான வரி அற­வீட்டில் நேரடி வரி அற­வீட்­டினை விடவும் மறை­முக வரியே அதி­க­ளவில் அறி­வி­டப்­ப­டு­கின்­றது. இது வரி அறி­வீட்டு முறையில் பெரும் சவால்­மிக்­க­தாக உள்­ளது. 2006 ஆம் ஆண்டு இறை­வரி சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அதன்­பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இற்றை வரை 8 திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சட்­ட­மூ­லத்தில் திருத்­தங்கள் செய்­வது மாத்­திரம் போது­மா­ன­தாக அமை­யாது. புதிய சட்­ட­மூலம் வேண்டும். இதனால் முத­லீ­டு­களை பெறு­வ­திலும் பெரும் சிக்கல் நிலை ஏற்­பட்­டுள்­ளது.நேரடி வரி குறை­வாக காணப்­ப­டு­கின்­ற­மை­யினால் அவ­தா­ன­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

நாட்டின் மொத்த தேசிய வரு­மானம் 2014 ஆம் ஆண்டு 10 வீத­மாக காணப்­பட்­டது. எனினும் கடந்த 2 வரு­டத்தில் தேசிய வரு­மா­னத்தை 15 வீத­மாக அதி­க­ரித்­துள்ளோம். அடுத்து வரும் காலங்­களில் 20 வீதம் வரைக்கும் கொண்டு வரு­வதே எமது இலக்­காகும். தற்­போ­தைக்கு 82 சத­வீதம் மறை­முக வரி­யா­கவும் 18 சத­வீதம் நேரடி வரி­யா­கவும் அற­வி­டப்­ப­டு­கின்­றது. இதனால் பால்மா, சீனி கொள்­வ­னவு செய்யும் சாதா­ரண மக்­களே பாதிப்­புக்­குள்­ளா­கின்­றனர். நேரடி வரி அற­வீட்டில் நாம் பிராந்­தி­யத்தில் இறுதி நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். இதன்­படி மலே­சியாவில் நேரடி வரி­யாக 72 வீதமும் , இந்­தி­யாவில் 50 வீதமும், சிங்­க­ளப்­பூரில் 45 வீதமும் பாகிஸ்­தானில் 37 வீதமும், பங்­க­ளா­தேஷில் 35 வீத­மாக அறி­வி­டப்­ப­டு­கின்­றன. எனினும் இலங்கை நேரடி வரி வரு­மான அற­வீட்டில் பல­வீனம் அடைந்­துள்­ளது.

அத்­துடன் சாதா­ரண வச­தி­ய­டைந்­தோரும் சாதா­ரண மக்­க­ளுக்கும் ஒரே அள­வி­லான சமாந்­த­ர­மான வரி­யையே செலுத்­து­கின்­றனர். இது பெரும் அநி­யா­ய­மாகும். இதன்­படி நாம் இறை­வரி சட்­ட­மூலம் நிறை­வேற்­று­வதன் ஊடாக 2020 ஆம் ஆண்­டாகும் போது நேரடி வரி வரு­மா­னத்தை 40 வீத­மா­கவும் அதி­க­ரிக்­கவும் மறை­முக வரி­யை 60 வீத­மாக குறைக்­கவும் முடியும்.

அதே­போன்று இலங்­கையில் வரு­மான வரி செலுத்த தகு­தி­யா­ன­வர்கள் உரிய வகையில் பதிவு செய்­வ­தில்லை. இதன்­படி 2016 ஆம் ஆண்­ட­ளவில் 43 ஆயி­ரத்து 990 நிறு­வ­னங்­களே வரு­மான வரி செலுத்­து­த­வற்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அதே­போன்று 1 இலட்­சத்து 19 ஆயி­ரத்து 300 தனி­ந­பர்கள் வரி செலுத்த பதி­வா­கி­யுள்­ளனர். இது பெரும் குறை­வாகும். எனினும் பதிவு செய்­யப்­பட்­டுள்ள 43 ஆயி­ரத்து 990 நிறு­வ­னங்­களில் 30 சத­வீத நிறு­வ­னங்­களே பூரண வரி செலுத்­தி­யுள்­ளன. அதே­போன்று தனி­ந­பர்­களில் 48 வீதத்­தி­னரே வரி செலுத்­தி­யுள்­ளனர்.

புதிய தேசிய இறை­வரி சட்­ட­மூலம் நிறை­வேற்­று­வதின் ஊடாக 45 பில்­லியன் ரூபா வரு­மானம் அர­சாங்­கத்­திற்கு கிடைக்கும்.மேலும் வற் வரியை எம்மால் 2 சத­வீ­தத்­திற்கு குறைத்து கொள்ள முடியும். இதன்­படி குறித்த சட்­ட­மூ­லத்தின் அடிப்­படை விட­ய­தா­னங்கள் அடுத்த மாதம் முதல் அமு­லுக்கு வரும். எனினும் அடுத்த வரு­டத்தின் ஏப்ரல் மாதத்­தி­லேயே பூர­ண­மாக அமு­லுப்­ப­டுத்­தப்­படும்.

அத்துடன் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக தண்டபணங்களிலும் மாற்றங்கள் செய்யவுள்ளதுடன் அவர்களுக்கான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம். வரி செலுத்தாதவர்கள் தொடர்பான வழக்கு தொடர்ந்தும் தாமதப்படுத்துவதினால் நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதிப்பாக அமையும். ஆகையால் வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.

Previous Post

லலித் வீரதுங்க, அனுஷ மீதான தீர்ப்பு : மேன் முறையீடு செய்வோம்- மஹிந்த

Next Post

ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு, வெள்ள அபாயம்

Next Post
ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு, வெள்ள அபாயம்

ஆறு மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு, வெள்ள அபாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures