Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிதாக நிர்மாணிக்கப்படும் தாதியர் பீடத்திற்கு ஜனாதிபதி அடிக்கல்

December 21, 2017
in News, Politics
0
புதிதாக நிர்மாணிக்கப்படும் தாதியர் பீடத்திற்கு ஜனாதிபதி அடிக்கல்

அறிவு, ஆற்றல், திறமை நிறைந்த பட்டதாரி தாதியர்களை உருவாக்கும் நோக்குடன் ஸ்ரீ ஜயவர்தனபுர தாதியர் கல்லூரி வளாகத்தில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த தாதியர் பீடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படும் இந்த தாதியர் பீடத்திற்கான மொத்தச் செலவு 14.5 பில்லியன் ரூபாய்களாகும். 17 மாடிகளைக் கொண்ட இந்த தாதியர் பீடத்தில் 2,000 தாதியர்கள் ஒரே தடவையில் பயிற்சிகளைப் பெறுவதற்கான வசதிகள் காணப்படுகின்றன.

குறித்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி கொழும்பு கிழக்கு ஆதார மருத்துவமனை வளாகத்தில் நிர்மாணிக்கப்படுவதுடன், விளையாட்டு வசதிகள், நீச்சல் தடாகம், உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்டதாக இது அமைக்கப்படுகிறது.

தாதியர் பீடமொன்று ஆரம்பிக்கப்படுவதற்கான வேண்டுகோள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் காணப்பட்டதுடன், ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் 2016 ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தினூடாக அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது.

தேசிய மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டதாரி தாதியர்களை உருவாக்குதல், தாதியர் சேவையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பயிற்சிகளையும் அறிவையும் பெற்றுக்கொடுத்தல், தாதியர் சேவையின் நிபுணத்துவத்தினை மேம்படுத்துதல் என்பன இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய தாதியர் பீடத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கான நினைவுப் பலகையை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார்.

தாதியர் சேவையின் உன்னதத்திற்காக ஜனாதிபதி அவர்களின் பங்களிப்பினை பாராட்டும் முகமாக விசேட பரிசிலும் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதி அமைச்சர் பைசர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க, அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous Post

ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற ஐ.நா. சபை இன்று வாக்கெடுப்பு

Next Post

உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?

Next Post

உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures