Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரித்தானிய 2 ஆம் மகாராணி நபியவர்களின் 43 ஆவது பரம்பரையா!

April 8, 2018
in News, Politics, World
0

பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபியின் 43 ஆவது பரம்பரையில் வந்தவர் என மீண்டும் வெளியாகியுள்ள தகவல்கள் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலிசபெத் மகாராணி தொடர்பில் மறைக்கப்பட்டிருந்த தகவல்கள் மீண்டும் வெளிப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனால், பிரித்தானிய மக்கள் அச்சமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளதாக உள்நாட்டு சகோதர மொழி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவல்கள் இதற்கு முன்னர் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு அரச அரண்மனையிலிருந்து கசிந்திருந்தன. இதனை மறைப்பதற்கு அரண்மனை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாகவும் குறிப்பிடப்படுகின்றன. இருப்பினும், கடந்த 32 வருடங்களின் பின்னர் இந்த தகவல்கள் மீண்டும் வெளிப்பட்டுள்ளன.

இந்த தகவல்களினால், பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணி கவலையடைந்துள்ளதாகவும் அச்செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் இரகசிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன்போது மகாராணியின் 43 பரம்பரைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றன.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், நபியவர்களின் மகள் பாத்திமா (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவரே பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணி என தெரியவந்துள்ளதாகவும் அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.

இந்த தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த போதிலும், தற்பொழுது அவை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதனால், எலிசபெத் மகாராணி உட்பட பிரித்தானிய மக்களும் அச்சமடைந்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், இந்த தகவல்கள் இஸ்லாமியர்களுக்கு ஒரு கௌரவமாகும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, பிரித்தானிய மக்கள் இந்த தகவல்களை ஏற்றுக் கொள்ள தயாரில்லையெனவும் இது தொடர்பில் சகோதார மொழி ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

தொழில்நுட்ப பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Next Post

தரைத்தோற்ற மாற்றங்களுடன் இலங்கையின் புதிய வரைபடம்

Next Post

தரைத்தோற்ற மாற்றங்களுடன் இலங்கையின் புதிய வரைபடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures