Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் வழங்கிய வாக்குறுதிகள் இன்றும் நிறைவேற்றப்படவில்லை – சிறிதரன்

July 21, 2019
in News, Politics, World
0

கல்முனை விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமையினாலேயே அவருடனான சந்திப்பை கூட்டமைப்பு தவிர்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திகடந்த நெருப்பாறு 3வது நூல் நேற்று கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஈ.சரவணபவன், முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் வழங்கிய வாக்குறுதிகள் இன்றும் நிறைவேற்றப்படவில்லை. கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு இன்றுவரையில் கணக்காளர் நியமிக்கப்படவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்க முயற்சித்தபோது, இந்த விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவு வழங்கப்படாமையினால், அவருடனான சந்திப்பை கூட்டமைப்பு தவிர்த்தது.

பிரதமருடனான சந்திப்பு குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

Previous Post

ஏழை மக்களின் கல்வியை பறிக்க மத்திய அரசு முயற்சி

Next Post

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்தமாதம் நியமனம்!

Next Post

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்தமாதம் நியமனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures