Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரச்சினைக்கு தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினை

March 10, 2021
in News, Politics, World
0

பிரச்சினைக்கு தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினையை உருவாக்குவதே அரசின் நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனநாயக ரீதியாக அகிம்சை வழிமுறையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு அரசிடம் கோரினால், இனவன்முறைகள், இனவழிப்புகளைப் பதிலாக அரசு கொடுத்தது. தற்போது ஜனாசாக்களை எரிக்காது அடக்கம் செய்யுமாறு தமிழ் பேசும் மக்கள் கோரியதற்கு, இரணைத்தீவில் சடலங்களைப் புதைக்கலாம் என்று அங்கு வாழும் மக்களுக்கு மேலுமொரு பிரச்சினையை அரசு உருவாக்கியுள்ளது. சமூகங்களைப் பிரித்தாளுவதே அரசின் நோக்கமாக இருக்கிறது.

தேசிய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுகளாகவே உள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதெல்லாம் ஓரினத்திற்குச் சாதகமான ஓசையாகவே இருக்கிறது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து 73 ஆண்டுகளாக சிங்கள அதிகார வர்க்கமே ஆட்சி செய்கிறது. நாட்டில் அபிவிருத்தியோ, அமைதியோ ஏற்படவில்லை. தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவுமில்லை. உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆளுமை ஆட்சியாளர்களுக்கு இல்லாததாலேயே பிரச்சினை சர்வதேசம் வரை நீண்டுள்ளது.

சண்டித்தனத்தால் பிரச்சினைகளை உருவாக்கலாம் ஆனால் சமாதானத்தை உருவாக்க முடியாது. சாணக்கியம், சாதுரியம், மனித நேயம் என்பவற்றால் தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இந்த நாடு மியன்மாரின் இராணுவாட்சித் தடத்தைப் பின்பற்றப் போகிறதா? இல்லை தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவின் ஜனநாயகத் தடத்தைப் பின்பற்றப் போகிறதா? என்பது தான் எனது கேள்வியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

அரசின் மோசமான செயல்களால் மீண்டும் சர்வதேச பொறிக்குள் இலங்கை!

Next Post

கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உலக அளவில்11.81 கோடியை கடந்தது

Next Post

கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உலக அளவில்11.81 கோடியை கடந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures