டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பாடகி சின்மயி தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீ டூ புகார் கூறிய சின்மயி தன்னை வேண்டுமென்றே பழிவாங்கிவிட்டதாக குற்றம் சாட்டி வந்தார்.
இது பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவருக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.
பெரிய சட்டப்போராட்டம் காத்திருப்பதாக சின்மயி இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.