ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பல போராட்டங்களுக்கு மத்தியில் நீதி அமைச்சர் பதவியை முகமது அலி சப்ரிக்கு ஒப்படைத்துள்ளார் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரே கற்றல் முறை மற்றும் ஒரே சட்டம் இருந்தால், எதிர்காலத்தில் சஹ்ரான் போன்றவர்கள் தோன்றுவதைத் தடுப்பதற்கான சிறந்த முறையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகத்தை இலக்காகக் கொண்ட ‘சஹாரா’ என்ற வார்த்தையை அகற்றுவது புதிய நீதி அமைச்சரின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்தார்.
நீதி அமைச்சர் அலி சப்ரி தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்ற போது குறித்த விழாவில் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

