Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலப்பிட்டியில் முதலைப் பூங்கா!!

November 24, 2017
in News, Politics
0
பலப்பிட்டியில் முதலைப் பூங்கா!!

காலி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள முதலைகளுக்கு பலப்பிட்டியில் பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஹிக்கடுவ தேசிய வனப் பூங்கா பொறுப்பாளர் ஏ.வீ. கசுன் தரங்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட செயலகத்தில் நேற்று (23) நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால் பிரதேச மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளனர். ஈரமான பகுதிகளில் வாழும் முதலைகள் மிகவும் கடும் சுபாவம் கொண்டதாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாதுகங்கை, கொக்கல குளம், நில்வலா கங்கை, பொல்அத்து மோதர கங்கை போன்ற நீர் நிலைகளில் முதலைகளின் செயற்பாடு அதிகம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளம் போன்ற காரணங்களினால் இந்த முதலைகள் கிராமங்களுக்குள்ளும் பிரவேசித்துள்ளன. இதற்கு மாற்று ஏற்பாடாக பலப்பிட்டி, கரிஜ்ஜபிடியவிலுள்ள நிலப்பரப்பில் முதலைப் பூங்கா ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Previous Post

இந்தியாவில் அகதி வாழ்வு வாழும் எமது உறவுகளும் தாயகம் திரும்ப வழி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை!!

Next Post

இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

Next Post
இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures